Sunday, June 17, 2012

தந்தையர் தினம்!!


                                   அவசர உலகில் அனைத்துக்கும் நாட்கள்,பிறந்தது மட்டுமே ஒருநாளில்,பெற்றோர் பேணிப்பாதுகாத்ததோ எந்நாளும் இருக்கணும் பிள்ளைகள் நினைவில்,நன்றிக்கேன்று நாள் ஒதுக்கினால் காற்றும் நீரும் உனக்கு ஒரு நாள் போதுமா,நன்றிக்கு மட்டும் அவை வந்து சென்றால் உன் வாழ்வு நிலைக்குமா???அவசர உலகில் அன்னை தந்தைக்கும் சுகம் தரும் துணைக்கும் துன்பமே தரும் பிள்ளைகளுக்கும் ஒரு நாள் போதுமா?????எனக்கு நீங்க செய்த தியாகத்துக்கு ,என்னிடம் நீங்க காத்த பொறுமைக்கு,என்னால் பட்ட துயருக்கு இந்நாள மட்டும் போதுமா??எந்நாளும் உங்களுக்கு மகன் நான் சொல்லும் நன்றிகள் கோடி,அது என் ஆவி போகும் வரை நீடிக்கும் டாடி!!,உங்கள் பெயரால் எனக்கு வந்தது மதிப்பு,நான் உங்களுக்கு தந்ததோ அவமதிப்பு,நீங்கள் என்னால் பட்ட வேதனைகளின் வலி தந்ததுதான் இன்று நான் விடும் கண்ணீர்த்துளி!!காதலுக்காக பெற்றோரை காட்டிக்கொடுப்பவரே உங்களை தூக்கி அன்றே போட்டிருந்தால்..........நினைத்துப்பாருங்கள் எந்நாளும் நன்றி கூறுங்கள் என்நாளும்,உங்களை பார்த்து உங்கள் பிள்ளைகளும் உங்களிடம் பாசம் கொள்வர்,முதியோர் இல்லங்களும் முடிந்துபோகும்!!!!

No comments:

Post a Comment