Saturday, April 7, 2012

நெருப்புத்தணலை உண்ணும் விசித்திர மனிதன்!


பொதுவாக இதுவரையில் இரும்பு, சோப்பு, கிரீஸ், மற்றும் பெட்ரோல் இவைகளை உணவாக உட்கொள்ளும் விசித்திரமான மனிதர்களைப் பார்த்திருக்கிறோம்.
நெருப்பு தணல் கையில் பட்டாலே கை கொப்பளித்து விடும், உடைந்த டியூப் பல்ப், கையில் பட்டால் கையை கிழித்துவிடும். இவை இரண்டையும் சர்வ சாதாரணமாக தின்று தீர்க்கிறார் இந்த இந்திய இளைஞன்.
அம்புலி அபு, இந்தியாவின் கோயம்புத்தூரை சேர்ந்த இளைஞன். சிறுவயதில் பள்ளிப்படிப்புக்கு முழுக்கு போட்ட அபு, சாதனை செய்யவேண்டும் என்ற தீயை தன்னுள் வளர்த்துக் கொண்டார்.
அதனால் ஏற்பட்டது தான் இந்த தணலையும், கண்ணாடி பல்புகளையும் உண்ணும் பழக்கம். இச்சாதனையை சர்வ சாதாராணமாக செய்யும் இவர், தன்னால் உணவின் சுவையை அறிய முடியாது போய் விட்டது என்று வருத்தப்படுகிறார்.

No comments:

Post a Comment