Saturday, April 7, 2012

யாழில் இரு இந்து ஆலயங்களில் விஷமிகள் புகுந்து அட்டகாசம் !


யாழில் ஒரே நாளில் இரண்டு இந்து ஆலயங்களில் உள்ள சுவாமி காவும் வாகனங்களின் தலைகளை, விஷமிகள் அரிவாள் போட்டு அறுத்துச் சென்ற சம்பவம் நேற்று இடம் பெற்றிருக்கின்றது.
இந்த சம்பவதில் கோப்பாய் - பிரான்பற்று பிரதேசத்தில் பிள்ளையார் ஆலயத்தின் வாகன சாலையில் பகலில் புகுந்த விசமிகள் இரண்டு வாகனங்களின் தலைகளை அறுத்துச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் வாகன சாலையினை துப்புரவு செய்வதற்காக மாலையில் திறந்தபோதே ஆலய நிர்வாகத்தினருக்குத் தெரயவந்துள்ளது. இதேபோன்று யாழ். அச்செழு பகுதியிலும் ஆலயமொன்றினுள் புகுந்து கொண்ட விசமிகள் அங்கிருந்த வாகனங்களினதும் தலைகளை அறுத்துச் சென்றுள்ளனர்.
யாழ்.குடாநாட்டில் இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதுடன், ஆலயங்களில் விக்கிரகங்கள் திருட்டுச் சம்பவமும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் வெளிப்படையாக கைதுசெய்யப்படவோ, சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டணை பெற்றுக்கொடுக்கப்படவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment