Thursday, March 8, 2012

நாக்கினால் ஓவியம் வரைந்து அசத்தும் மனிதர்!


மனிதர்களின் திறமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவின் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஓவியக் கலைஞர் ஒருவர் நாக்கினால் ஓவியம் வரைந்து அசத்தி வருகின்றார்.
கே. அனி. ஓவியப் பாட ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் கால்களினால் ஓவியம் வரையும் கலைஞர்களின் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டு தானும் வித்தியாசமான சாதனையை புரிய வேண்டும் என்று தீர்மானித்தார்.
முதலில் மூக்கால் ஓவியங்களை வரைய முயற்சித்த இவர் ஏற்கனவே பலரும் மூக்கால் ஓவியங்கள் வரைந்து இருக்கின்றனர் என்று அறிந்த போது நாக்கால் ஓவியங்களை வரைகின்ற முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டு உள்ளார்.

No comments:

Post a Comment