Tuesday, March 13, 2012

மாணவனின் நெஞ்சுக்கு அருகாமையில் குத்திய மரக்கிளை !


9 mar2012மாத்தறை, யட்டின கோட்டவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனின் கமுகு கட்டுப் பகுதியில் சுமார் எட்டு அங்குல அளவுக்கு ஏறி இருந்த மரக்கிளை ஒன்றினை மாத்தறை வைத்தியசாலை டாக்டர்கள் நேற்று (08) வெளியே எடுத்துள்ளனர். இந்த மாணவன் தனது வீட்டுக் கூரையில் ஏறி நின்றிருந்த போதே மரக்கிளை ஒன்றின் அவனைப் பதம் பார்த்திருந்தது.
அந்த மாணவனை அவர்களது பெற்றோர் குறித்த மரக்கிளையுடன் சேர்த்தே வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

உடனடியாகச் செயற்பட்ட டாக்டர்கள் மாணவனுக்கு உயிராபத்து ஏற்படாத வகையில், அவனது உடம்பிலிருந்து அந்த மரக்கிளையை அகற்றியுள்ளனர். குறித்த மரக்கிளையை வெளியே எடுப்பதற்கு டாக்டர்களுக்கு சுமார் 45 நிமிடங்கள் போராடியுள்ளனர். அதுமட்டுமல்லாது மாணவன் உயிரையும் காப்பாற்றியுள்ளனர்.






No comments:

Post a Comment