Saturday, March 24, 2012

எந்த தமிழனும் வரவில்லை!


ஈழப் படுகொலை...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்றான்...!
பால் விலையேற்றம்....! அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது தடுக்க முடியாதது என்றான்...!
எரிபொருள் விலையேற்றம் ....!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு அது மத்திய அரசு ஆணை நம்மால் ஒன்னும் செய்ய முடியாது என்றான்...!
மீனவர் தாக்குதல்...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு மீனவன் ஏன் எல்லைதாண்டி போகிறான் என்றான்...!
முல்லை பெரியாறு பிரச்சனை...!அழைத்தோம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரவில்லை...!
ஏன் என்று கேட்டதற்கு எனக்கு முல்லை பெரியாறு நீர் வருவதில்லை என்றான்...!
இதோ இன்று...!
சபரி மலையில் ...தமிழர்கள் தாக்கப்பட்டனர்..!அழைப்போம் போராட்டத்திற்கு
எந்த தமிழனும் வரமாட்டான் ...!
ஏன் என்று கேட்டால் ...யார் அவர்களை கேரள கோயிலுக்கு போகச்சொன்னது என்பான் ...!


ஆனால்.......!
இந்திய -மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் ..
எவனும் அழைக்க வில்லை...!
வேலை வெட்டியை விட்டுவிட்டு வரிசையில் நின்று அனுமதி சீட்டு வாங்குகிறான்..!
ஏன் என்று கேட்டால் ....தேசபற்று என்கிறான்...!
அடேய் ..! தமிழா வாழ்க உனது தேசப் பற்று..!
Courtesy: @santhana krishna
 





*நீங்க உண்மையை மிக அற்புதமாய் சொல்லியுள்ளீர்கள்.ஆனா யாரும் like போடல,காரணம் தமிழன் உண்மையை like பண்ணுறதேயில்லையே!!ஏதாவது figurஇன் பெயரில் ஜொள்ளு போடுங்க லட்சக்கணக்கில் like போடுவாங்க,comment உம் எழுதி தள்ளுவாங்க,அட்டை figur படம் போடுங்க ஆகா,ஓகோ என்றெல்லாம் பின்னுவாங்க,நல்லதை,உண்மையைவேதனையை எதுதினால் யாருமே வரானுங்க,கடவுள் இருக்கா,இல்லையா என்று போடுங்க,தமிழ் பேசும் தெலுங்கர் "ஐயா சொல்லி,அண்ணா சொல்லி கருணா சொல்லி(அனைவரும் தெலுங்கர்)திருந்தாதவங்க எப்போ திருந்தப் போறாங்க" என்றபடி நாஸ்தீ கம் பொறிபறக்க எழுதுவாங்க,அவங்கட அடிமையாம் நம் தமிழனும்(சத்யராஜ்,வேறு யாரப்பா தமிழன்) "ஆமா "போடுவான்.தமிழனுக்காக தனக்காக ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்கமாட்டான்.ஏனென்றால் காட்டுமிராண்டியாச்சே!! 

No comments:

Post a Comment