Friday, February 24, 2012

அவுஸ்திரேலியாவில் மனைவியை கொலை செய்த இலங்கையர் கைது!


மனைவியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் இன்று அவுஸ்திரேலியா பேர்த் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
பேர்த்தின் புறநகரான Willetton என்ற இடத்தில் உள்ள வீட்டில் நேற்று பிற்பகல், 46 வயதான பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொலை தொடர்பில் பெண்ணின் 50 வயதான கணவர் கைதுசெய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த இந்த குடும்பம் நான்கு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து அவஸ்திரேலியாவில் குடியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பத்தில் ஒரு மகள் 12 வயதைக்கொண்டவர் மற்றவர் மருத்துவ மாணவி என்று அவுஸ்திரேலியா செனல்10 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment