Monday, February 27, 2012

காவலர்களை ஏமாற்றி கமெராவுக்கு​ள் மாட்டிய திருடர்கள்!


சமீப காலமாக வங்கிக் கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு உலகளாவிய நிலையில் காணப்படும் வேலையில்லா பிரச்சினையும் காரணமாக இருக்கலாம். தற்போது இத்தாலியிலும் வங்கிக் கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதாவது இத்தாலியிலுள்ள பிரபல வங்கி ஒன்றினுள் அங்கு கடமையிலிருந்த காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தந்திரமாக உள்ளே நுளைந்துள்ளனர்.
எனினும் அவர்கள் அங்குள்ள காசு இயந்திரத்தை திருட முற்பட்டதை ரகசியக் கமெராவில் பதிவாகியுள்ளது.
மேலும் 30,000 யூரோக்களை கொண்டிருந்த அந்த இயந்திரத்தை திறக்க முடியாமல் திண்டாடிய வேளை சம்பவத்தை அவதானித்த வங்கி ஊழியர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, பின்பு அங்கு விரைந்து வந்த பொலிசார் அவர்களை கைது செய்தனர்.

No comments:

Post a Comment