Monday, October 10, 2011

பிரபல கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் மரணம்

பொதுவாக கஜல் பாடுவதில் பாகிஸ்தான் பாடகர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.
இதனை தகர்த்தவர் ஜக்ஜித் சிங். பிரபல கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் இன்று மும்பை மருத்துவமனையில் காலமானார்.
70 வயதான அவர் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
'கஜல் கிங்' என்று போற்றப்பட்டவர் ஜக்ஜித் சிங். இந்தி, உருது, பஞ்சாபி மற்றும் நேபாளி மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
பொதுவாக கஜல் பாடுவதில் பாகிஸ்தான் பாடகர்களே முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்திய கஜல் பாடகர்கள் ஒரு மாற்றுக் குறைவாகவே கருதப்பட்டனர்.
ஆனால் இதனை தகர்த்தவர் ஜகஜித் சிங்தான். கஜல் என்றாலே ஜக்ஜித் என்று சொல்லும் நிலையை உருவாக்கினார். கஜல் இசையை நவீனமாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
முதன்முதலில் மல்டி ட்ராக்கில் கஜலை பதிவு செய்தவர் ஜக்ஜித் சிங்தான். சினிமா இசையிலும் தனி முத்திரை படைத்தவர் ஜக்ஜித் சிங்.
பிரேம் கீத், சாத் சாத், அர்த் என பல சூப்பர் ஹிட் படங்களில் இவர் பாடியுள்ளார். இவரது இசைத் துறை சாதனைக்காக மத்திய அரசு பத்மபூஷன் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
ஜக்ஜித் சிங்கின் மனைவி பெயர் சித்ரா சிங் இவரும் ஒரு பாடகிதான். இருவரும் இணைந்து பல அற்புதமான ஆல்பங்களைக் கொடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment