Saturday, October 29, 2011

7 ஆம் அறிவு படத்தை பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள் தமிழர்களே!

இன்று நாம் வணங்கும் சிவன் அன்பின் பிரதிபலிப்பு,சக்தி உலகை இயக்கம் திறண்.இப்படி சூட்சுமமாக பெயர்களை வைத்து மக்களுக்காக வாழ்ந்தவர்களையும் சக்தி கொண்டவரையும் கடவுளாக்கிய நம்மவர் தமது படைப்புகளை இவற்றுக்குள் மறைத்துவிட்டனர்.அறிவுள்ளவர்கள் மட்டுமே அறியக்கூடியதாக இலகு தமிழில் சொன்னதெல்லாம் நாஸ்தீ கப்பார்வையாலும் அந்நிய மோகத்தாலும் இலகு தமிழே புரியாததாலும் நம்மவர் மூடர் என்ற மூடப்பகுத்தறிவாலும் அறியாமலே போனது.அந்நியரால் அயல்நாடுகளில் பயன்படுத்தப்படும் ஆராய்ச்சிகள் எல்லாம் எம்முன்னோர் பயனாக்கி மறைத்துவைத்தவையே!!இதை சொன்னால்!!!


ஒரு முறை சுஜாதா அவர்களிடம் ஒருவர் 7 ஆவது அறிவு என்னவாக இருக்கும் என கேட்டதற்கு தொழிநுட்பத்தை .ஊடகங்கங்களை பயன்படுத்தி செய்யப்படுவது என கூறினார் . உதாரணமாக மனிதன் உருவாக்கிய கணணி மனிதனை விட வேகமாக வேலைகள் செய்யும் . அதே போல இயற்கை ஊடகங்களை(சக்திகளை ) பயன்படுத்தும் திறன் சித்தர்களுக்கு இருந்திருக்கிறது .அதானால் தான் இந்த பெயராக இருக்க வேண்டும் .

7 ஆம் அறிவு திரைப்படம் பற்றி விமர்சனமாக இந்த பதிவை வைக்க போவதில்லை . சில விமர்சகர்கள் என்போரின் விமர்சனங்களுக்காக எழுதும் பதிவு .

அதற்கு முதல் இப்போது இருக்கும் தமிழ் மேதைகள் கூட்டம் பற்றி ஒரு வித அறிமுகம் கொடுக்கிறேன் .

இந்த மேதைகள் கூட்டத்தால் எந்த பயனும் இதுவரை காலமும் தமிழுக்கு, சைவத்துக்கு இருந்ததில்லை . எழுத்துலக பிரம்மாக்கள் என்பவர்கள் இலக்கிய சொட்ட சிறு கதையையும் ,கவிதைகளையும் இணையம் முழுக்க கொட்டி வைத்திருக்கிறார்கள் . கவிதைகளுக்கு ,கதைகளுக்கும்,முக்கியமாக சினிமாவுக்கும் இணையத்தில் பஞ்சமில்லை . ஒரு விஞ்ஞானம் பற்றிய விடயமோ ,அது பற்றிய ஆராய்ச்சிகளோ இணையத்தில் இல்லை .தமிழை,தமிழின் தொன்மைகளை விஞ்ஞான பார்வையில் தேடினால் ஒன்றையும் காணக்கிடைக்காது .ஒரு சில பிளாக்கர்களின்(எண்ணலாம்) ஆக்கங்கள் தவிர .

இந்த நேரத்தில் போதிதர்மன் எனும் கதாப்பாத்திரம் 7 ஆம் அறிவில் இருக்கிறது என கேள்விப்பட்டேன் . இணையத்தில் தேடிய போது ஆங்கிலத்தில் பல விடயங்கள் கொட்டிக்கிடந்தது . தமிழில் ஏழாம் அறிவோடு சேர்ந்த செய்திகளாகவே போதிதர்மன் பற்றி தமிழில் காணக்கிடைத்தது .

யாராவது ஒருவர் தமிழின் தொன்மை பற்றி ஆராய்ச்சி செய்தால் அதை பற்றி ஒருவர் கூட வாய் திறந்து பேசுவதில்லை . செம்மால் மானவை எனும் பேராசியர் திருக்குறளில் 140 குறள்களில் இருக்கும் நவீன மருத்துவம் பற்றிய தகவல்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள் . இவ்வளவு பெரிய பொக்கிஷத்தை வைத்துக்கொண்டு இத்தனை காலம் எப்படி இருக்கிறீர்கள் என்பது அவரின் கேள்வி??? .இது எத்தனை பேருக்கு தெரியும் .எத்தனையோ பேர் மருத்துவம் படிப்பீர்கள் .யார் தேடியிருக்கிறீர்கள் ! எத்தனை எஞ்சினியர்களுக்கு தஞ்சை பெரும் கோவிலின் கட்டடக்கலை தெரியும் ! எத்தனை பேர் நீங்கள் படிக்கும் துறையில் தமிழை நவீன மயப்படுத்த தயாராக இருக்கிறீர்கள் . இத்தனைக்கும் தகுதி இருந்தால் 7ஆம் அறிவை .முருகதாஸை நீங்கள் தவறாக விமர்சிக்க முடியும் .

வைரமுத்துவிடம் ஒரு பெரிய நடிகர் தமிழ் வருவது போல பாடலில் வரி எழுதி தாருங்கள் ,தாய் குலத்தோடு ஒரு சீன்,உழைக்கும் வர்க்கத்தோடு ஒரு சீன் என கேட்டு வாங்குகிறார்கள் ஒரு உழைப்பும் ஒரு விடயமும் இல்லாமல் . இது எதை, பாச உணர்வை தூண்டி ?யாரை முட்டாளாக்கி பணம் சம்பாதிக்கும் வழி ? இந்த நடிகரின் எல்லா பாடல்களிலும் தமிழ் வருவதை கவனிக்கலாம் . இது ஒரு விடயத்தை சொல்லி,வரலாற்றை சொல்லி தானே தமிழ் தமிழ் என்கிறார்கள் .அதை விட இது எவளவோ மேல்.

தமிழ் உணர்வை தூண்டி விட்டு பணம் சம்பாதிக்க முடியும் என்றால் அதில் எனக்கு பெருமையாக இருக்கிறது .தமிழ் உழைப்பது பெருமை தானே ! அவர் பணம் பண்ணுவது ,கருணாநிதி குடும்பம் பணம் பண்ணுவது ,சூர்யா விஜய் சண்டை ,வரலாறு தவறு ,முருகதாஸ் தவறு என்பதை விட்டு சொன்ன கருத்து புரிந்து கொண்டீர்களா முதல் ? அதற்காக செயற்படுவீர்களா ? .ஒருவருமே செய்யாத போது ஒருவன் செய்ததை மட்டம் தட்டி ,அன்றோடு மறந்து விடுவீர்கள் தானே .

போகி என்ற பெயரில் எங்கள் முக்கிய குறிப்புகளை அழித்தார்கள் என்பது முற்றிலும் உண்மை . அவன் கண்டுபிடித்த விடயங்களை ,பொக்கிஷங்களை படையெடுப்புகள் மூலம் பின்னர் எம்மை ஆண்டவர்கள் அழித்தார்கள் என்பது உண்மை . சித்தர்கள் புத்தகங்களில் நவீன விஞ்ஞானம் இருப்பது போன்ற விடயங்கள் எமக்கு தெரியும் .ஆனால் சிலபஸ் படி படித்தோம் ,வேலை கிடைத்தது .பணம் பணம் என்று ஓடினோம் என்று போய்க்கொண்டே இருப்போம் . ஏன் இன்னும் அறிவியலுக்கு ஒவ்வாத சித்திரையை புதுவருடமாக நாம் கொண்டாடவில்லையா ??

இதுவரை தமிழ் சினிமா காட்டாத பக்கத்தை தைரியமாக தமிழை நம்பி எடுத்திருக்கிறார் முருகதாஸ் . முதல் நிமிடங்களில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தை காட்டும் போதே ஒரு வித திமிர் தொற்றிக்கொள்கிறது. சூர்யாவின் மிடுக்கான தோற்றம் ஒரு வீரனை முன்னிறுத்தியது . போதி தர்மன் பற்றிய முதல் 15 நிமிடங்களுக்கு மிகவும் உழைத்திருக்கிறார்கள் . இதே காட்சி சீனப்படத்தில் வந்திருந்தால் சங் சாங் என்று பேசியிருந்தாலும் பார்த்துவிட்டு இப்படி எல்லாம் தமிழ்ல எடுக்க மாட்டாங்களே என்று திட்டு வேறு . அதே தமிழில் எடுத்தால் ?

படத்தில் வரும் நோக்கு வர்மம் என்பது சித்தர்கள் பற்றி வாசித்தவர்களுக்கு தெரியும் . நோக்கு வர்மம் மட்டும் அல்ல .சித்தர்கள் பல கலைகள் பலருக்கு தெரியாது என்பது நம் துரதிஷ்டம் . ஒன்றுமே தெரியாதவிடத்து இப்படியொன்று இருக்கிறது,தமிழனின் பொக்கிஷங்களில் விஞ்ஞானம் இருக்கிறது என்று நினைவு படுத்தியது முருகதாசின் குற்றமாக இருக்கலாம் .

எம் முன்னோர்களை வணங்காமல் அவர்களை விஞ்ஞானிகளாக பாருங்கள் என்று ஒரு செய்தி வருகிறது . இது எத்தனை பேருக்கு புரிந்திருக்குமோ தெரியவில்லை .

இந்த திரைப்படத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு ஒரே பதில் சொல்லலாம் . "நம்மை இங்கு நாமே தொலைத்தோம் " . நிச்சயம் தமிழர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம் . பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள்

No comments:

Post a Comment