Sunday, September 18, 2011

குரோத அரசியலில் ஈடுபட மாட்டேன்!- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

[ ஞாயிற்றுக்கிழமை, 18 செப்ரெம்பர் 2011, 02:53.06 PM GMT ]
குரோத அரசியலில் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் குரோதத்துடன் நடவடிக்கைகளை ஒருபோதும் மேற்கொண்டதில்லை, அனைவரையும் ஒரே விதமாகவே நோக்குகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியைக் கொள்வனவு செய்துள்ளதாக சிலர் குற்றம் சுமத்துகின்றனர், இந்த குற்றச்சாட்டு உண்மையானதே, ஆளும் கட்சியில் பல்வேறு தரப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.
சிங்கள மற்றும் முஸ்லிம் விவசாயிகளுக்கு மாவிலாறு பகுதியில் நீர் வழங்க மறுத்த காரணத்தினால் புலிகள் மீது தாக்குதல் நடத்துமாறு படையினருக்கு உத்தரவிட்டேன்.
தமிழீழ விடுதலைப் புலிகளே யுத்தத்தை ஆரம்பித்தனர், நாம் முதலில் தாக்குதல் நடத்தவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment