Wednesday, September 28, 2011

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படும் 50 இலங்கையர்கள் நாளை வருவர்

[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 03:34.37 PM GMT ]
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 50 பேர் நாளை இலங்கை வரவுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அதாவது அரசியல் புகலிடம் கோரி பிரிட்டனில் தஞ்சமடைந்தவர்களே வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவுற்று அமைதி திரும்பிய நிலையில் சட்டவிரோதமாக குடியேறுவதும் அரசியல் தஞ்சம் கோருவதும் மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment