குடும்பத்திலும் சரி,அலுவலகத்திலும் சரி,மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும்,ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும்!
- நானே பெரியவன்,நானே சிறந்தவன் என்ற அகந்தையை(Ego) விடுங்கள்!
- அர்த்தமில்லாமலும் பின்விளைவை அறியாமலும் பேசிக்கொண்டிருப்பதை விடுங்கள்(loose talk)!
- எந்த விசயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள்(Diplomacy),விட்டுக்கொடுங்கள்(Compromise)!.
- சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்(Tolerance)!!
- எல்லோரிடத்திலும் எல்லாவிசயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்!.
- உங்கள் விசயங்களில் உடும்புப்பிடியாய் இராது கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்(Flexibility)!.
- மற்றவர் களுக்குரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்(Courtesy)!.
- புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்புச்சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுபோல நடந்து கொள்ளாதீர்கள்!.
- பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இரங்கி வரவேண்டுமென்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.
No comments:
Post a Comment