Monday, August 20, 2018

கொக்குவில் சம்பியன் லேனிலே நேற்று இரவு வைத்தியரின் வீட்டிற்குள் நடந்தேறிய அட்டூழியம்!!


யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.
கொக்குவில் சம்பியன் லேனிலேயே நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
“3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டது. வந்தவர்களின் கைகளில் பொல்லுகள் உள்பட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டன.
வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உள்பட்ட வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்துவிட்டு கும்பல் தப்பித்தது. வீட்டிலிருந்த எவருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என்று மருத்துவர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் பல வழிகளிலும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன என்றும் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, சனிக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த நிலையில் மறுநாள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/104986

No comments:

Post a Comment