Thursday, May 24, 2018

தமிழர்களை சாதி விலக்கி வைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்: கமல் எச்சரிக்கை !!


தூத்துக்குடியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அநியாயமாக 12 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த படுபாதக சம்பவத்தின் ஈரம் கூட காயாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள இணைப்புகளை துண்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கிட்டத்தட்ட உலகின் பிற பகுதிகளிலிருந்து இந்த 3 மாவட்டங்களும் துண்டிக்கப்பட்டது போன்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா? அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கி வைப்பீர்களா? சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை!.

http://news.lankasri.com/india/03/179498?ref=ls_d_india

No comments:

Post a Comment