Wednesday, May 16, 2018

சுவிஸில் வாழும் ஈழத்து மாணவிக்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விடுதலைப் புலிகள்


சுவிட்ஸர்லாந்தில் மொழி மற்றும் கலாச்சார பாடங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கத்தை உணர்ந்ததாக ஈழத்து தமிழ் மாணவி ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.
சுவிட்ஸர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் இலங்கை தமிழ் மாணவியான லாவண்யா சின்னதுரை(28) வசித்து வருகின்றார்.
கல்வியில் ஊடுருவியிருக்கும் அரசியல் தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள லாவண்யா, புலம்பெயர் தமிழர்களிடத்தில் புலிகள் அமைப்பு எவ்வாறு அரசியல் தாக்கத்தை உருவாக்கியது என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.
சிறு வயதில், மாவீரர் நாளில் புலிகள் அமைப்பின் இராணுவ உடையுடன் திரிவது என்பது மிக சாதாரணம். தற்போது சுவிஸ் மொழி மற்றும் கலாச்சார பாடங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மொழி மற்றும் கலாச்சார பாடத்திட்டங்களில் புலிகள் அமைப்பின் அரசியல் தாக்கம் இருப்பதால் தமிழர்கள் சுவிட்ஸர்லாந்தில் இருந்து வெளியேறி தம் மக்களுக்காக போராட களமிறங்க வேண்டும் என்பதல்ல.
மாறாக நாம் சுவிட்ஸர்லாந்தில் ஏன் வாழ்கிறோம் என்பதை நன்கு உணர்ந்தாலே போதும். அதுவே மிக முக்கியமானது. பெர்ன் மாகாணத்தின் கல்வித்துறையானது மொழி மற்றும் கலாச்சார கல்வியில் வீணாக தலையிடுவதில்லை.
அரசியல் சார்ந்து நடுநிலை பேணுகிறது. மாணாவர்களிடையே அரசியல் சார்ந்த ஊடுருவல் இருப்பதாக உணர்ந்தால் அதிகாரிகள் கண்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எந்த கருத்தியலுக்கும் இரண்டு பக்கம் உண்டு. அதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும். புலம்பெயர் தமிழ் சமூகமானது மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றாகும்.
மொழி மற்றும் கலாச்சார வகுப்புகளில் விடுதலைப் புலிகள் தொடர்பிலான கருத்துகளுக்கு மிகுந்த மரியாதை வைத்துள்ளோம், அத்துடன், குறித்த வகுப்புகளால் மொழியும் இலக்கணமும் கற்றுத் தேர்ந்துள்ளோம் என்றார்.
எவ்வாறாயினும், வரலாறு என்பது முழுக்க முழுக்க அரசியல்” அவர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

http://www.tamilwin.com/swiss/01/182736?ref=rightsidebar

No comments:

Post a Comment