அமெரிக்காவில் உள்ள பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிட மாகாணத்தின் Ocala பகுதியில் உள்ள Forest High School-ல் மர்ம நபர் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.
இதனால் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக என்பது குறித்து தகவல்கள் தெரிவிக்கவில்லை என அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், அப்பகுதி வழியே பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்த தகவல் பெற்றோருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், தங்கள் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆகியிருக்குமா என்ற அச்சத்தில் அலறி அடித்து பள்ளிக்கு விரைந்துள்ளனர்.
http://news.lankasri.com/usa/03/176957?ref=imp-news
No comments:
Post a Comment