Tuesday, April 17, 2018

எச்சரிக்கை! மேலும் பாடசாலை மாணவி உள்ளிட்ட இருவர் பலி !


கலென்பிந்துனுவெவ கிவுலேகட வாவியில் நீராட சென்ற பாடசாலை மாணவி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை உறவினர்களுடன் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
5 பேர் நீராட சென்றுள்ள நிலையில் அதில் 4 பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதில் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் 28 வயது இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்துள்ள மாணவி உயர்தரத்தில் கல்வி கற்று வரும் நிலையில் அவர் இவ்வருடம் உயர் தர பரீட்சைக்கு தோற்றவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களின் உடலங்கள் அனுராதபுரம் மற்றும் கலென்பிந்துனுவெவ மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , பிரேத பரிசோதனையின் பின்னர் உடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.


http://www.jvpnews.com/srilanka/04/169323?ref=recommended2

No comments:

Post a Comment