கலென்பிந்துனுவெவ கிவுலேகட வாவியில் நீராட சென்ற பாடசாலை மாணவி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலை உறவினர்களுடன் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
5 பேர் நீராட சென்றுள்ள நிலையில் அதில் 4 பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதில் இரண்டு பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் 28 வயது இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடலங்கள் அனுராதபுரம் மற்றும் கலென்பிந்துனுவெவ மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , பிரேத பரிசோதனையின் பின்னர் உடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
http://www.jvpnews.com/srilanka/04/169323?ref=recommended2
No comments:
Post a Comment