சுவிட்சர்லாந்தில் இலங்கை சுற்றுலாப்பயணிகள் உட்பட 40 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சூரிச் அருகிலுள்ள சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் பயணிக்கும்போது அந்த சுற்றுலா பேருந்து இரண்டு லொறிகளுடன் மோதியதில் பேருந்தின் ஓட்டுனரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணும் இரண்டு வாகனங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை மீட்புக் குழுவினர் போராடி மீட்க வேண்டியிருந்தது, பேருந்து ஓட்டுனருக்கு ஓரளவு மிதமான காயங்கள் ஏற்பட்ட நிலையில் அந்தப் பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
லொறி ஓட்டுனர் ஒருவருக்கும் பேருந்து பயணிகளில் 12 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்த விவரங்கள் இது வரையில் கிடைக்கவில்லை.
http://news.lankasri.com/swiss/03/176798?ref=ls_d_swiss
No comments:
Post a Comment