Wednesday, April 18, 2018

தலை துண்டிக்கப்பட்டு இரத்தக்காயங்களுடன் கிடந்த சடலம்? பொலிசையே தலை சுற்ற வைத்த சம்பவம்


ஜேர்மனியில் தலை துண்டிக்கப்பட்டு இரத்த காயங்களுடன் கிடந்த சடலத்தைக் கண்டு பொலிசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
ஜேர்மனியின் Remstal பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு இரத்தம் வழிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் பொலிசார் மற்றும் 20 தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருந்ததால், இது கொலை தான் என்று பொலிசார் நம்பியுள்ளனர்.

இருப்பினும் இதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக தீயணைப்பு படை வீர்களில் ஒருவர் இறந்து கிடந்த சடலத்திற்கு அருகில் சென்று சோதித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஏனெனில் அது சடலமே கிடையாது, அது ஒரு பொம்பை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒன்றுமே இல்லாத விடயத்திற்கு 20 தீயணைப்பு படையினர், பொலிசார் அங்கு குவிக்கப்பட்டதால், பலரும் இது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

http://news.lankasri.com/germany/03/176721?ref=ls_d_germany

No comments:

Post a Comment