Sunday, April 15, 2018

பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் 22249 விடுதலைப் புலிகள் எனும் படைப் பிரிவு


விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நேரடிக் கண்காணிப்பில் 22249 போராளிகள் ஒரு பெரும் படைப்பிரிவாக இருந்துள்ளார்கள் என்ற தகவல்கள் தற்பொழுது தெரியவந்திருக்கிறது.
பெரும் படைப் பிரிவுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் ஒவ்வொரு பிரிவு படையணிகளுக்கும் தமிழ் எழுத்துக்களின் ஒரு எழுத்தை பதித்து அடையாளப்படுத்தியது.
அந்த எழுத்துகள் ஒவ்வொரு படையணியை குறித்துக்காட்டியது. அதாவது "ஜ" என்ற எழுது விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவு என்பதாகும்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடிக் காண்காணிப்பில் (0) சைவர் படையணி இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0:01 என்னும் இலக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் விடுதலைப் புலிகளின் பல்வேறு படையணிகள் இருந்தபோதும் அவை ஒவ்வொன்றிலும் எத்தனை விடுதலைப் போராளிகள் இருந்தார்கள் என்பது இதுவரை வெளிவராத இரகசியமாக காணப்படுகின்றது.
இறுதி யுத்தம் நடைபெற்ற நந்திக்கடல் பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் சைவர் பிரிவு இலக்கத்தகட்டில் 0:22249 என்று குறிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முறையே 0:01 தொடக்கம் 0:22249; போராளிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடி கண்காணிப்பில் இருந்துள்ளார்கள் என்பது வெளிச்சமாகியுள்ளது.





http://www.tamilwin.com/community/01/179826?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment