யாழ். கொக்குவில் மேற்கு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சற்குணம் அவா்கள் 28-02-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவா்களான நமசிவாயம், குமாரசாமி, தெய்வேந்திரம், சந்திரமதி மற்றும் பரமேஸ்வரி, கோமதி(உரிமையாளர்- கோமதி விலாஸ், செட்டியார் தெரு, கொழும்பு), யோகேஸ்வரி, சரஸ்வதி(கனடா), மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் விமலாதேவி, உதயசற்குணம், தெய்வேந்திரம், சரவணபவன்(கனடா), புளோரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோமதி, கோமகன், தேவசுரேந்திரன், தஷானந்தன், தாரணி ஆகியோரின் அன்பு மாமாவும்,
அஜித்தா, மாலினி, மயூரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுப்பையா கோமதி - சகோதரி
- Mobile : +94777604772
- Phone : +94212226098
No comments:
Post a Comment