Saturday, October 13, 2018

வீட்டில் செல்வம் பெருக எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும்?

ஒருவர் தனது ராசிக்கு ஏற்ற கடவுள்களை வணங்கி வந்தால் நினைக்கும் காரியம் வெற்றி பெறும்.
எனவே எந்த ராசிக்காரர் எந்த கடவுள்களை வணங்க வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் தனது பலத்தை அதிகரிக்க சிவனை வணங்க வேண்டும்.
ரிஷபம்
ராசியை ஆளும் கிரகமும் சுக்கிரன். எனவே இவர்கள் லட்சுமி தேவியை வணங்க, அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். ஆகவே இந்த ராசிக்காரர்கள் தனது சக்தியை கூட்டுவதற்கு ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும்.
கடகம்
கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். இந்த சந்திரனின் வலிமையை இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை மிகுந்த பக்தியுடன் வணங்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனின் வலிமையை அதிகரிப்பதற்கு சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின்
கன்னி
கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன் ஆகும். இவர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியை ஆளும் கிரகம் செவ்வாய். எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.
தனுசு
தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு. குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.
மகரம்
மகர ராசியை ஆளும் கிரகம் சனி. இந்த கிரகத்தின் வலிமையை சிசிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசியை ஆளும் கிரகமும் சனி. செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும்.
மீனம்
மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வர நல்ல பலன் கிடைக்கும்.

https://news.lankasri.com/spiritual/03/189975?ref=ls_d_others

No comments:

Post a Comment