Sunday, July 8, 2018

நெற்றியில் சந்தன பொட்டு வைத்த முஸ்லீம் சிறுமிக்கு நேர்ந்த கதி!

கேரளாவில் பள்ளி ஒன்றில் படித்து வந்த முஸ்லீம் மாணவி நெற்றியில் சந்தப்பொட்டு வைத்ததற்காக அவரை பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.
மதரசா என்ற பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் ஹென்னா, குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்துள்ளார். இதற்காக அவரை பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது.
இதுகுறித்து அவரது தந்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நல்லவேளை என் மகள் கல் வீச்சு தண்டனையில் இருந்து தப்பி விட்டார்.
ஹென்னா அனைத்து துறையிலும் ஆர்வம் உடையவர். படிப்பிலும் சுட்டி. கலை விழாக்களில் பல்வேறு பரிசுகளை பெற்றவர். வகுப்பில் முதலிடத்தில் இருப்பவர். மதரசா பொது தேர்வில் ஐந்தாம் இடம் பிடித்தவர் என பதிவிட்டுள்ளார்.
இத்தகவலை, 2,800 பேர் ஷேர் செய்துள்ளனர். சமூக வலை தளங்களில் இந்த விஷயம் வேகமாக பரவி வருகிறது.


http://news.lankasri.com/india/03/182912?ref=ls_d_india

No comments:

Post a Comment