Friday, July 13, 2018

யாழில் முக்கியஸ்தர்கள் தங்கியுள்ள நிலையில் நடந்துள்ள பயங்கரம்!

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் தங்கியுள்ள நிலையில் கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழில் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நேற்று சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்ந்தனர்.
அவர்கள் இன்றும் யாழ். மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் நிலையில் யாழ். கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொடிகாமம் - கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையிலுள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழுவொன்று வீட்டை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசா சசிக்குமார் (வயது 44) என்பவர் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலும் நடத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த குழு தப்பிச் சென்றுள்ளதுடன், சம்பவத்தில் படுகாயமடைந்த சசிக்குமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு உடனடியாகவே முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இன்று காலை 9 மணிவரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குற்றச்செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கூறி 24 மணிநேரத்திற்குள் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.




http://www.tamilwin.com/security/01/187980?ref=home-latest

No comments:

Post a Comment