Friday, July 6, 2018

திருமணமாகாமலேயே கர்ப்பமாகும் சிறுமிகள்!.. அடைக்கலம் கொடுக்கும் கன்னியாஸ்திரிகளின் மோசமான செயல் ??


திருமணமாகாமலேயே கர்ப்பமாகும் சிறுமிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் காப்பகம் ஒன்றில் இருந்து குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த காப்பகத்தில் கருவுற்றிருக்கும் 11 சிறுமிகள் 75 மாற்றுத்திறனாளி பெண்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருமணமாகாமலேயே கர்ப்பமாகும் சிறுமிகளுக்கு இங்கு அடைக்கலம் தரப்படுகிறது. இந்த காப்பகத்தில் சிறுமிகளுக்கு பிறந்த குழந்தையை வேறு ஒருவருக்கு ரூ.50,000த்திற்கு விற்பனை செய்ததாக கன்னியாஸ்திரி கொஞ்சிலியா என்பவர் உட்பட 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைடுத்து காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸார் கருத்து வெளியிட்டுள்ளனர்,
குறித்த காப்பகத்தில் உள்ள 4 குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு குழந்தை உ.பிக்கும், மேலும் 3 குழந்தைகள் ஜார்கண்டிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, 11 சிறுமிகள் வேறு ஒரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தக் காப்பகம் மிஷினரிஸ் ஆப் சேரிட்டி என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருவதாகவும் இந்த அமைப்பிற்குச் சொந்தமாக வேறு சில காப்பகங்களும் செயல்பட்டு வருகின்றன என்றும், இருப்பினும் அந்த காப்பகங்களுக்கு சிறுமிகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவ இடத்தை குழந்தைகள் நல கமிட்டி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

http://www.manithan.com/india/04/178770

No comments:

Post a Comment