Tuesday, July 17, 2018

ராஜிவ் கொலை தொடர்பில் டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்திய சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த பதிவு!


பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ டில்லி செல்லவுள்ளார்.
இது தொடர்பில் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தனது நாட்டில் தீவிரவாதத்தை ஒழித்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க எனது அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் மஹிந்த கலந்துகொள்ளவுள்ளார்.
நாட்டுப்பற்றுள்ள இந்தியர்களை இதில் கலந்துகொள்ளுமாறு பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமி அழைப்பு விடுத்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்ற ஒரு கருத்தை கடந்த மாதம் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சுப்பிரமணியன் சுவாமி அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் மேலும் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.
மஹிந்த டில்லி வருகின்றார் என்ற அந்த கருத்தை கடந்த மாதம் 15ஆம் திகதி டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். ஆனால் குறித்த கருத்தரங்கு தொடர்பில் மேலதிக எந்த தகவலையும் அவர் வெளியிட்டிருக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின் இன்று மஹிந்தவின் வருகை குறித்தும், மேலதிக தகவல்களையும் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/188333?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment