Tuesday, June 5, 2018

முல்லைத்தீவில் இளைஞனின் கழுத்தை நெரித்து தாக்கிய பொலிஸ் அதிகாரிகள்!

முல்லைத்தீவு - வற்றாப்பளை பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வற்றாப்பளை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் அதே பகுதியில் நண்பர் ஒருவரின் வீட்டில் இரவு நேர விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது அந்த நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சிவில் உடையில் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த இளைஞனுக்கும் சிவில் உடையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இளைஞனை தாக்கியுள்ளனர்.
சம்பவத்தின் போது குறித்த தனது கழுத்துப் பகுதியை பொலிஸ் உத்தியோகத்தர் நெரித்ததாக அந்த இளைஞர் கத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட இளைஞன் தற்பொழுது முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு உயர்மட்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.tamilwin.com/community/01/184635?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment