Tuesday, June 5, 2018

உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை... ரத்த வெள்ளத்தில் தாயார்: லண்டனை உலுக்கிய துயர சம்பவம்


லண்டனில் உள்ள ஃபெல்தாம் பகுதியில் பச்சிளம் குழந்தை மற்றும் அதன் தாயாரை கொடூரமாக கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவான இளைஞரை பொலிசார் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 25 வயது ரெஹான் கான் என்பவரை கண்டுபிடிக்க உதவும்படி மாநகர பொலிசார் பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மட்டுமின்றி குறித்த நபரிடம் எவரும் அணுக வேண்டாம் எனவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக 999 என்ற எண்ணு தொடர்பு கொள்ளவும் பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

திங்களன்று மாலை சுமார் 7.12 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற பொலிசார் Swinfield பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 32 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார். அவரது அருகாமையில் பச்சிளம் குழந்தை ஒன்று நினைவிழந்து பலத்த காயங்களுடன் கிடந்துள்ளது.
இருவரையும் மீட்ட பொலிசார் உடனடியாக ஹெலிகொப்டரில் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது.
பின்னர் தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் அப்பகுதியில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த விவகாரம் தொடர்பில் 25 வயது ரெஹான் கான் என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு பதிந்துள்ள பொலிசார், பொதுமக்கள் எவரும் அவரை அணுக வேண்டாம் எனவும், பொலிசாருக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சம்பவம் நடந்த குடியிருப்பின் கதவு மற்றும் சுவர்களில் ரத்தக்கறை படிந்து இருந்தது என பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.





http://news.lankasri.com/uk/03/180484?ref=imp-news

No comments:

Post a Comment