Wednesday, June 20, 2018

வவுனியாவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

வவுனியாவில் நேற்றுமுந்தினம் தனது வைத்திய நிலையத்திற்கு ஆய்வு அறிக்கைகளை எடுத்துச் செல்லும் பணியாள யுவதியை பாலியல் துன்புறுத்தல் செய்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரிடம் முறைப்பாடிட்டதை தொடர்ந்து நேற்றைய தினம்(19.06.2018) வைத்தியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டு ஒரு வார விளக்கமறியலில் வைக்க்குமாறு நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து வைத்தியர் வவுனியா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்
வவுனியா மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஊடகங்களிற்கு ஓர் அறிக்கையினை வழங்கியுள்ளனர் குறித்த அறிக்கையில்
”அண்மையில் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர் என குறிப்பிட்ட செய்தி தொடர்பானது…”
குறிப்பிட்ட நபர்
1) அரச வைத்தியசாலை எதிலும் பணியாற்றுகின்ற வைத்தியர் அல்ல
2) ஆங்கில வைத்தியம் செய்வதற்கு தகுதி அற்றவர் எனவும்
3) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் இல்லை எனவும்
இவரை வைத்தியர் என குறிப்பிட்டு முழு வைத்திய சமூகத்தையும் கொச்சை படுத்துவதாக செய்தி அறிக்கை அமைந்துள்ளது,எனவே இது தொடர்பான மாற்றத்தினை செய்தி அறிக்கையில் மேற்கொள்ளுமாறு வவுனியா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம் என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
1) வவுனியாவில் RDHSல் பதியப்பட்ட வைத்திய நிறுவனங்கள் எத்தனை அவற்றில் பதியப்படாத வைத்திய நிலையங்களுக்கு தங்களது சங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன…?
2) வவுனியாவில் பலர் இது போல் போலி வைத்தியர்களாக வேஷம் போட்டு வருகிறார்கள் அவர்களுக்கு எதிராக நீங்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன?
முழு பொறுப்பும் உங்கள் கைகளில் தங்கியுள்ளது இவர்களுக்கு எதிரான உங்கள் கடும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் வவுனியாவில் போலி வைத்தியர்களின் முகத்திரகளை கிழித்தெரிய முடியும் என பலரும்ம் தெரிவிக்கின்றனர்.


http://www.jvpnews.com/srilanka/04/176799?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment