Saturday, June 9, 2018

திரு வைகுந்தநாதன் கெளசிகன் அகாலமரண அறிவித்தல்!

(பஸ் உரிமையாளர்- WPND1003, பம்பலபிட்டி இந்துக் கல்லூரி பழைய மாணவர், A/L-2010)
பிறப்பு : 28 ஓகஸ்ட் 1991 — இறப்பு : 4 யூன் 2018

யாழ். தெல்லிப்பளை மாவிட்டபுரம் மேற்கு கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வைகுந்தநாதன் கெளசிகன் அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமரபுரம் பரந்தனைச் சேர்ந்த கந்தசாமி சிவபூபதி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான மாவிட்டபுரம் மேற்கு கொல்லங்கலட்டியைச் சேர்ந்த தனபாலசிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
வைகுந்தநாதன், தவரஞ்சிதம்(சந்திரா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
வசிகரன்(அவுஸ்திரேலியா), பிரதீபன்(லண்டன்), காலஞ்சென்ற கெளரிதாசன், சிவகெளரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கயனி, ஜனனி, தயாநந்தன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,
தர்ஷிகன், மேனுயன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:தேவிவாசம், 
K.K.S வீதி,
துரைவீதி சந்தி,
இணுவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வைகுந்தநாதன்(தந்தை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773019943
வசிகரன்(சகோதரர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61403243499
பிரதீபன்(பிரபா- சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447407835412
தயாநந்தன்(தயா- மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+14165050658

No comments:

Post a Comment