Friday, June 1, 2018

ரஜினிகாந்த்தை யார் என்று கேட்ட இளைஞர் மீது தேசிய கொடி எரிப்பு வழக்கு? பூதாகரமாகும் தூத்துக்குடி விவகாரம்!

தமிழகத்தை மட்டும் இன்றி தமிழர்கள் வாழும் பல பகுதிகளில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 13 தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஈழத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமையை கண்டித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ரஜினிகாந்த் நேரில் சென்றிருந்தார்.
இதன்போது, சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் ரஜினிகாந்த்தை பார்த்து, யார் நீங்கள் என கேட்க அதற்கு நான்தான்பா ரஜினிகாந்த் என அவர் பதிலளித்தார்.
குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, இந்த சர்ச்சைகள் குறைந்ததாக இல்லை. மீண்டும் பூதாகரமாக மாறியுள்ளது.
தூத்துக்குடியில் ரஜினிகாந்த்திடம் "யார் நீங்க" என்று கேள்வி கேட்ட இளைஞர் மீது வழக்கு பதிய முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சந்தோஷ் ராஜ் என்ற குறித்த இளைஞர் கடந்த மாதம் 22ஆம் திகதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றபோது பொலிஸாரின் தடியடியால் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
100 நாட்கள் போராட்டம் நடைபெற்றபோது எங்களை பார்க்க வரவில்லை, இப்போது வந்துள்ளீர்கள். மற்றபடி நீங்கள்தான் ரஜினிகாந்த் என்பது எங்களுக்கு தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உடனே ரஜினிகாந்த் முகம் கடுமையானது. இளைஞருக்கு அருகில் இருந்து சென்றுவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் அதன்பிறகு கடும் கோபமடைந்துள்ளார்.
இந்த நிலையில், சந்தோஷ்ராஜ் கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் ரஜினிகாந்த் ஆதரவாளர்களும், அவரின் அரசியல் நாயகர்களும் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், எதிர்த்து கேள்வி கேட்ட சந்தோஷ் ராஜ் மீது தேச துரோகி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 'சோ கால்டு' ரஜினி ஆதரவாளர்கள், சோஷியல் மீடியாவில் ஒரு போட்டோவை பரப்பி வருகிறார்கள்.
தேசிய கொடியை எரித்த திலீபனுக்கும் சந்தோஷ் ராஜுக்கும் தொடர்பு உள்ளதாகவும், இவர் ஒரு 'ஆன்டி இந்தியன்' என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இது குறித்து இந்திய நாளிதழுக்கு சந்தோஷ்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார்.
தேசிய கொடியை எரித்ததாக திலீபன் மீது வழக்கு உள்ளதாகவும், எனக்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
நான் இதற்கு முன்பு திலீபனை பார்த்தது கூட இல்லை. அவருக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை. ரஜினிகாந்த் வந்து சென்ற பிறகுதான் திலீபன் வைத்தியசாலைக்கு வந்து சென்றார்.
எனக்கும் திலீபனுக்கும் தொடர்பு உள்ளதாக கூறி வழக்குப் பதிவு செய்ய முயற்சி நடப்பதாக தெரிகிறது. அப்படி நடந்தால் என்னுடைய எதிர்காலம் பாதிக்கும்.
நாங்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களிடம் மட்டுமே நான் கேள்விகளை கேட்டேன்.
நான் ரஜினிகாந்த் ரசிகர் என்ற முறையில் உரிமையில்தான் அந்த கேள்வியை கேட்டேன். அவர் இத்தனை நாட்களாக எங்கு இருந்தார்? இப்போது மட்டும் அவர் வர என்ன காரணம்?
இதேவேளை, அவர் எங்களை சமூக விரோதிகள் என கூறுகிறார். நாங்கள் சமூக விரோதிகள் என்றால் எங்களுக்கு ஏன் பணம் தர வேண்டும்? பணம் கொடுத்து அவர் சமூக விரோதிகளை ஊக்குவிக்கிறாரா? ரசிகர் என்ற முறையில் ரஜினி கருத்து எனக்கு வருத்தம் அளிக்கிறது என்றும் சந்தோஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/india/01/184250?ref=home-imp-parsely

No comments:

Post a Comment