Thursday, June 21, 2018

வெளிநாட்டிலுள்ள இலங்கை தமிழ் குடும்பத்துக்கு கிடைத்த அதிர்ச்சி!


அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை தமிழ் குடும்பத்தின் கோரிக்கையை அந்நாட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் Biloela பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழ் குடும்பத்தினால் தொடர்ந்தும் அங்கு தங்கியிருப்பதற்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை பெடரல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
2018ம் ஆண்டின் ஆரம்பத்தில் பிரியா, அவரின் கணவர் நடேசலிங்கம் மற்றும் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களின் 9 மாத குழந்தை தருணிகா, 2 வருட குழந்தை கோபிகா ஆகியோர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தனர்.
இறுதி நேரத்தில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட அவர்கள், அவுஸ்திரேலியாவில் தற்காலிகமான தங்க வைக்கப்பட்டனர்.
அந்நாட்டு எல்லைப்படையினரும், பொலிஸாரும் அக்குடும்பத்தை பலவந்தமாக பிலோலவில் இருந்து அப்புறப்படுத்தி மெல்பேர்ண் நகரின் தடுப்புமுகாமில் தடுத்து வைத்தனர்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து இந்த தம்பதினியர் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் இணைப்பு விசாவில் Biloela பகுதியில் தங்கியிருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 4ஆம் திகதி பிரியாவின் இணைப்பு விசா முடிவடைந்த தருவாயில் தனது விசாவை புதுப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனினும் திடீரென அவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதுடன், நாடு கடத்தப்படவிருந்தனர். எனினும் இறுதியில் அவர்கள் தற்காலிகமாக அவுஸ்திரேலியாவில் தங்க வைக்கப்பட்டனர்.
அதன் பின்னர் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்காக அவர்களினால் விண்ணப்பித்த விண்ணப்பத்தை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.



http://www.tamilwin.com/australia/01/186100?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment