Thursday, June 14, 2018

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் மாணவிகள் பலருக்கு செய்த கொடுமை அம்பலமானது

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியமை மற்றும் சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின்பேரில் வட்டுக்கோட்டையைச் சேந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் வட்டுக்கோட்டையிலுள்ள பிரபல பாடசாலை ஆசிரியரான அவரை, பாடசாலை நிர்வாகம் தற்பொழுது இடைநிறுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது.
வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் குறித்த ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் பலருக்கு பாலியல் வன்கொடுமை புரிந்துள்ளார் என சங்கானை பிரதேச சிறுவர் அலுவலகருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன.
அந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.
அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்ந்த மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் இன்று கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிரியர் வட்டுக்கோட்டையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கின்றார் என்றும் அவரை பாடசாலையிலிருந்து நீக்குமாறு பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கமும் பெற்றோரும் கடும் அழுத்தங்களை வழங்கினர் எனவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னகர்வுகள் தொடர்பில் பொலிஸார், பாடசாலை அதிபருக்கு அறிவித்திருந்தனர்.
அதனையடுத்து ஆசிரியரை பாடசாலையிலிருந்து இடைநிறுத்துவதாக பாடசாலை அதிபர் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

http://www.ibctamil.com/srilanka/80/101977?ref=ls_d_ibc

No comments:

Post a Comment