Sunday, June 10, 2018

கொக்குவிலில் வாள் வெட்டு குழுவை துரத்திப் பிடித்த இளைஞர்கள்


கொக்குவிலில் வாள்வெட்டில் ஈடுபட்ட குழு ஒன்று அந்தப் பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் சற்று முன்னர் நடந்துள்ளது. 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழு ஒன்றே வாள்வெட்டை நடத்தியுள்ளது.
வாள்வெட்டை நடத்திய குழுவைப் பிரதேச இளைஞர்கள் துரத்திச் சென்றனர். அந்தக் குழுவில் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

http://www.jvpnews.com/srilanka/04/175654

No comments:

Post a Comment