ஜேர்மனியில் 14 வயது யூதச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஈராக் அகதியை பொலிசார் தேடி வருகிறர்கள்.
Frankfurt அருகிலுள்ள Mainz என்னும் நகரைச் சேர்ந்த Susanna Feldman என்னும் சிறுமி மே மாதம் 22 ஆம் திகதி காணாமல் போனாள்.
இந்நிலையில் புதன் கிழமை அன்று Wiesbaden பகுதியில் ரயில் பாதைக்கருகே உள்ள ஒரு புதரில் அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்த இடத்தின் அருகில்தான் கொலை செய்ததாகக் கருதப்படும் ஈராக் அகதியான Ali Basar தங்கியிருந்த அகதிகள் முகாம் அமைந்துள்ளது.
Susannaவின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதும் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
அவளை அகதிகள் முகாம் அருகே நேரில் பார்த்த சாட்சிகளும் கிடைத்துள்ளனர். ஏற்கனவே Ali Basar அவனது புகலிட நிலைமை குறித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாலும் அகதிகள் முகாமில் 11 வயது சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படுவதாலும் அவனை பொலிசார் நன்கறிந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் தலைமறைவான அவன் ஈராக்குக்கு தனது குடும்பத்துடன் தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
35 வயதான இன்னொரு மனிதனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான்.
இதற்கிடையில் யூத இன வெறுப்பு காரணமாக இந்தக் கொலை நடந்ததாக செய்திகள் பரவி விடக்கூடாது என்பதில் பொலிசார் கவனமாக உள்ளனர்.
http://news.lankasri.com/germany/03/180667?ref=ls_d_germany
Frankfurt அருகிலுள்ள Mainz என்னும் நகரைச் சேர்ந்த Susanna Feldman என்னும் சிறுமி மே மாதம் 22 ஆம் திகதி காணாமல் போனாள்.
இந்நிலையில் புதன் கிழமை அன்று Wiesbaden பகுதியில் ரயில் பாதைக்கருகே உள்ள ஒரு புதரில் அவளது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்த இடத்தின் அருகில்தான் கொலை செய்ததாகக் கருதப்படும் ஈராக் அகதியான Ali Basar தங்கியிருந்த அகதிகள் முகாம் அமைந்துள்ளது.
Susannaவின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதும் முரட்டுத்தனமாக தாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
அவளை அகதிகள் முகாம் அருகே நேரில் பார்த்த சாட்சிகளும் கிடைத்துள்ளனர். ஏற்கனவே Ali Basar அவனது புகலிட நிலைமை குறித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாலும் அகதிகள் முகாமில் 11 வயது சிறுமி ஒருத்தியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படுவதாலும் அவனை பொலிசார் நன்கறிந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் தலைமறைவான அவன் ஈராக்குக்கு தனது குடும்பத்துடன் தப்பியோடியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
35 வயதான இன்னொரு மனிதனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டான்.
இதற்கிடையில் யூத இன வெறுப்பு காரணமாக இந்தக் கொலை நடந்ததாக செய்திகள் பரவி விடக்கூடாது என்பதில் பொலிசார் கவனமாக உள்ளனர்.
http://news.lankasri.com/germany/03/180667?ref=ls_d_germany
No comments:
Post a Comment