Friday, May 25, 2018

தமிழகமும் யாழ்ப்பாணமாக மாறிவிடும் என அஞ்சும் இந்திய இராணுவ வீரர்


தமிழகமும் ஒரு நாள் இலங்கையின் யாழ்ப்பாணமாக மாறிவிடுமோ என்ற அச்சம் தனக்கு இருப்பதாக இந்திய இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது தமிழக பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ள காணொளியில் அவர் இதனை கூறியுள்ளார்.
காஷ்மீரில் சேவையாற்றி வரும் இந்த தமிழக வீரர், தமிழக பொலிஸாரே தமிழ் மக்களை சுட்டுக்கொன்றமை குறித்து தன்னுடன் சேவையாற்றும் சக படையினர் கேலியாக கூறுவது தனக்கு வெட்கத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/india/01/183569?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment