Saturday, May 12, 2018

இந்த அறிகுறிகள் இருக்கா? உங்கள் திருமண பந்தம் பலவீனமாக உள்ளதாம்


திருமணம் என்பது மிகவும் புனிதமான உறவாக பார்க்கப்படுகிறது. திருமணம் செய்து கொள்பவர்களுக்கு குடும்ப பொறுப்புகளோடு சில சமூக பொறுப்புகளும் இருக்கின்றன என்பதுதான் உண்மை. இருப்பினும் கடந்த சில தசாப்தங்களாக திருமண பந்தம் என்பது நீதிமன்றத்தின் வாயிலில் நின்று போராடிக் கொண்டிருக்கிறது.
இந்த பந்தத்தை தற்காத்து கொள்வது பற்றிய கவனம் எல்லோருக்கும் இருப்பதில்லை. பொருளாதார சுதந்திரம் காரணமாகவே ஒரு உறவிலிருந்து இன்னொரு உறவிற்கு மாறிக் கொள்வது என்பது சுலபமாக இருக்கிறது.
இருப்பினும் ஒரு உறவை ஏற்படுத்தியபின் அதிலிருந்த பிணைப்பு கயிற்றை அறுத்து விலகி வெகுதூரம் செல்வது என்பது வெகு சிலரால் இன்னமும் ஏற்று கொள்ளவே முடிவதில்லை.
ஒரு புதிய உலகில் வாழும் இரு உயிர்கள் தங்கள் வாழ்வு சிக்கலின்றி நடைபோடுகிறதா என்பது பற்றி அறிந்து கொள்ள தேவையாக இருக்கிறது.
அதற்காக உதவி செய்யவே சில குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன

அடங்கி போதல்
கணவன் மனைவிக்குள் யார் விட்டு கொடுத்து போகிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டாக வேண்டும். அவசியமின்றி யார் அதிகமாக விட்டு கொடுக்கிறார்களோ அவர்கள் இன்னொருவரிடம் அதிகமாக அடங்கி போவதான சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
உங்கள் இணை தானே முடிவுகள் எடுத்து அதனை உங்கள் மேல் திணிக்கிறார்கள் என்றால் உங்கள் உறவு சிக்கல் ஆரம்பிப்பதற்கான முதல் முடிச்சு விழுந்து விட்டதாக அர்த்தம். விட்டு கொடுத்தல் என்பது பரஸ்பரம் நிகழ வேண்டும். ஒருதலை பட்சமாக இருந்தால் வாழ்க்கை இருண்டு விடும்.

வெளிப்படையாக பேச முடிவது
உங்கள் துணையிடம் அணைத்து விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக பேச முடிகிறதா என்பது பற்றி நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
உங்களுக்கு கருத்துக்களை கூறுவதற்கான உரிமை என்பது தனி மனிதனின் அடிப்படை ஜனநாயக உரிமை. அதில் உங்களுக்கு தடை ஏற்படுகிறது என்றால் நீங்கள் இதனை சரி செய்தாக வேண்டும்.

சுதந்திரம்
உங்களது சுதந்திரம் என்பது உங்களுக்கான பாதுகாப்புகளோடு உங்களிடமே இருக்கிறதா அல்லது எது ஒன்றிற்கும் உங்கள் துணையிடம் அனுமதி வாங்கி செய்கிறீர்களா என்பது பொறுத்துதான் அமையும்.
கலந்தாலோசனை செய்வது என்பது வேறு இணையிடம் அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும் என்பது வேறு. ஆகவே எல்லாவற்றிற்கும் அனுமதி பெற்று செய்கிறீர்களா என்பதை சோதித்து கொள்ளுங்கள்.

மற்ற உறவுகளால் ஏற்படும் பிரிவுகள்
உங்கள் இருவரது உறவுகள் சிலசமயம் பிரிவினை ஏற்படுத்த கூடும். சில சமயங்களில் உங்கள் வீட்டை சேர்ந்தவர்களே உங்களது பிரிவினைக்கு காரணமாக அமைவார்கள்.
பிரியத்தை பங்கு போட்டுக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் உங்களிடம் இல்லாத ஏதாவது ஒன்றை பற்றி உங்களது இணையிடம் தவறாக பேசுவார்கள்.
பக்குவமற்ற இணையாக இருப்பின் அது குறித்த வாக்குவாதங்கள் உங்களுக்குள் நிகழலாம். அந்த நேரங்களில் உங்கள் துணையின் செயல்பாடு எது சார்ந்து இருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் கவனிப்பது மிக அவசியம்.

புரிதல்
உங்கள் இருவருக்கு இடையேயான புரிதல் அளவு எந்த அளவிற்கு இருக்கிறது என்பது பொறுத்துதான் உங்கள் உறவு சிக்கலின்றி அமையும். ஒரு சில ஜோடிக்கெல்லாம் பேச்சு வார்த்தை என்பதை விடவும் செயல்களை வைத்தே அழகாக புரிந்து கொள்ளும் திறன் இருக்கும்.
ஒருவேளை இது போன்ற புரிதல்கள் சரியாக இல்லாவிட்டால் நீங்கள் இன்னமும் அவர்களுடன் பழகும் நேரத்தை அதிகரித்து கொள்ள வேண்டியிருக்கும்.

நேரம்
உங்கள் இவருக்கான தனிப்பட்ட நேரம் என்பதை நீங்கள் ஒதுக்கியே ஆகவேண்டும். ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் பேசிக் கொள்ளவும் இந்த நேரத்தை செலவிட வேண்டும்.
நேரம் குறைய குறைய உங்கள் இருவரிடையேயான எல்லைக்கோடுகள் நீண்டு கொண்டே போகும். நீங்கள் உறவிலிருந்து விலகி கொண்டே இருப்பீர்கள்

துரோகம்
உங்களிடம் உங்கள் கணவர் எதையாவது மறைக்கிறார் எனில் கவனம் வேண்டும். உங்கள் இருவர் இடையே வேறு உறவுகள் நுழைந்தது என்றால் உங்கள் உறவு மரணத்தை நோக்கி பயணிப்பதாகவே அர்த்தம்.
விளையாட்டாக பேசுவதும் பேசிக்கொண்டே அது போல செய்வதும் நல்லதல்ல. துரோகம் என்பது செய்யும்போது சுகமாக இருந்தாலும் அதன் மூலம் உண்மையான உறவுகளை இழக்க நேரிடும்போது வலி அதிகமாக இருக்கும்.

ஆகவே இந்த அறிகுறிகள் உங்கள் வாழ்விலும் ஏற்பட்டால் கவனமுடன் இருந்து அதனை களைய பாருங்கள். ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று என்று போவதற்கு வாழ்க்கை ஒன்றும் காசு கொடுத்து வாங்கும் பொருள் அல்ல.
ஆகவே பொறுமையோடு உங்கள் சிக்கல்களை அணுகுங்கள். நீங்களாகவே அதிலிருந்து வெளிவந்து விட முடியும்.

http://news.lankasri.com/relationship/03/178170?ref=ls_d_lifestyle

No comments:

Post a Comment