Thursday, May 31, 2018

மாமியாரை சரமாரியாக அடித்து கழுத்தை நெறித்து மிரட்டிய மருமகள்: காமெராவில் சிக்கிய காட்சி

இந்தியாவில் வயதான மாமியரை மருமகள் மாடியில் வைத்து சரமாரியாக அடிக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்தவர் ஜோஷ்டா பவுல்(75). இவரின் கணவர் சமீபத்தில் இறந்ததால், இவர் தனது மகன் மற்றும் மருமகள் ஸ்வப்னா பவுல்லுடன் கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வருகிறார்.
வயதான காலத்தில் வீட்டில் தங்கி தொல்லை கொடுப்பதால், மாமியாரை ஸ்வப்னாப் பல முறை அடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஸ்வப்னாவின் மாமியார் மாடியில் இருக்கும் பூச்செடியில் பூவை பறிப்பதற்கு சென்றுள்ளார்.
அதன் பின் பூவையும் பறித்துள்ளார். இதைக் கண்ட ஸ்வப்னா உடனடியாக தன்னை கேட்காமல் நீ எப்படி பூ பறிக்கலாம், என்று ஆத்திரத்தில் அவரை சரமாரியாக அடிப்பதுடன் கழுத்தை நெறித்து கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இது தொடர்பான காட்சியை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட தற்போது அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

http://news.lankasri.com/india/03/180080?ref=home-imp-flag

No comments:

Post a Comment