Tuesday, May 15, 2018

யாழில் எல்லை மீறும் போதைப்பொருள் பாவனை! பொலிசாரின் விசேட அறிவித்தல்!

Image
யாழ்ப்பாணத்தில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருள் கடத்தல் - விற்பனையை முற்றாக ஒழிக்க வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவால் சிறப்பு பொலிஸ் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அமைக்கப்பட்டுள்ள செயலணி தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் குடாநாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்கள் ஊடாகவும் ஒட்டப்படவுள்ளன.
அந்த செயலணிக்கு பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை 0766093030 என்ற கைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு முன்வைக்க முடியும். முறைப்பாடுகளின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலணி துரிதமாக செயற்பட்டு போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கைது செய்வர். எனவே அனைவரும் இந்த செயற்றிட்டத்துக்கு ஒத்துழைக்கவேண்டும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment