Friday, May 25, 2018

இறுதி மூச்சை நிறுத்திக்கொண்ட மில்லியன் கணக்கான இதயங்களை கவர்ந்த இளம்பெண்


தனது ஊக்கமளிக்கும் பதிவுகளால் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பாலோயர்களை கொண்டுள்ள 24 வயது மொடல் அழகி வயிற்று புற்றுநோயால் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Nara Almeida(24) என்ற மொடல் அழகிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிடும் நேர்மறையான பொன்மொழிகள் மற்றும் உலக நடப்புகள் அதிகளவில் அனைவராலும் கவரப்பட்டது.
இதன் காரணத்தினாலேயே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4.5 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதற்கான சிகிச்சை எடுத்துவந்தார். புற்றுநோயின் தாக்கம் அதிகரித்ததால் Nove de Julho மருத்துவமனையில் immunotherapy சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது கூட, தனது உடல்நிலை குறித்து அவ்வப்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டு வந்தார், இவர் குணமடைய வேண்டும் என்பதற்காக இவரது ரசிகர்கள் பிராத்தனை செய்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி மில்லியன் கணக்கான மக்களை கவர்ந்த இந்த இளம்பெண் நேற்று தனது இறுதிமூச்சை நிறுத்திக்கொண்டார்.

இந்த தகவலை இவரது காதலன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார், வாழ்க்கையோடு போராடி வந்த Nara உயிரிழந்துவிட்டார். அவளின் இறப்பு எனது இதயத்தில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவள் இறந்தாலும் எனது இதயத்தில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள்.
எனக்கு முன்மாதிரியாக இருந்த அவள் இனி நிரந்தரமாக ஒய்வெடுக்க சென்றுவிட்டாள் என கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவு 2 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.




http://news.lankasri.com/othercountries/03/179529?ref=ls_d_world

No comments:

Post a Comment