Thursday, May 24, 2018

கோடி கணக்கான பணத்திற்காக நடிகை ஸ்ரீதேவி கொலை! திடுக்கிடும் தகவலினால் வெடிக்கும் புதிய சர்ச்சை


பிரபல நடிகை ஸ்ரீதேவி அவரது கணவர் போனி கபூரின் உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபைக்கு சென்றிருந்த நிலையில் மரணமடைந்தார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்தகாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் தங்கியிருந்த அறையின் குளியல் தொட்டியில் மூழ்கித்தான் அவர் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
தற்போது ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை பொலிஸார் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
துபாயில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் தாதா தாவூத்தின் சொத்து எனக்கூறிய அவர், சவுதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இக்கொலையில் தாவூத்திற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக மீண்டும் கூறிவரும் ஆணையர், தமது சந்தேகங்களின் உண்மையறிய அதே ஓட்டலில் தமது புலனாய்வுக் குழுவுடன் தங்கியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீதேவி பெயரில் 240 கோடி ரூபாய் காப்பீடு இருந்தது என்றும் இந்த காப்பீட்டின் நிபந்தனைப்படி ஸ்ரீதேவி துபாயில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாகவும் பூஷண் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதேவி மரணம் குறித்து புதிய புதிய தகவல் வெளியாகி வரும் நிலையில், புலனாய்வு பிரிவின் இந்த தகவல் அனைவர் மத்தியிலும் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

http://www.manithan.com/cinema/04/173756

No comments:

Post a Comment