பிறப்பு:14-03-1950 இறப்பு:14-05-2018
தாவடியை(பிள்ளையார் கோயில் அருகாமை)பிறப்பிடமாகவும் தாவடி ( மாரிதோட்டம்) ,கொழும்பை(தற்காலிக) வசிப்பிடங்களாகவும் கொண்ட திரு சிவக்கொழுந்து செல்வராசா (ஓய்வுபெற்ற பொறியியலாளர்) இன்று யாழ் மருத்துவமனையில் அகாலமரணமானார்!
அன்னார் அமரர்களான சிவக்கொழுந்து ,பொன்னம்மா தம்பதிகளின் பாசமுள்ள மகனும் அமரர்களான தம்பியையா,சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும் செல்வராசா இராஜேஸ்வரியின் அன்புக்கணவரும்
செல்வராசா சிவப்பிரியன்(தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்),செல்வராசா தர்ஷனா(விஞ்ஞான ஆசிரியர்-கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரி),செல்வராசா பபியா(வயம்பா பல்கலைகழக விரிவுரையாளர்-டெமொன்ஸ்றேற்றர்) ஆகியோரின் அன்புத்தந்தையும்
திருமதி அன்னலட்சுமி தம்பிராசா(ஓய்வுபெற்ற ஆசிரியை),திருமதி சரஸ்வதி இராசரட்ணம்(லண்டன் சென் ஜோசெப் கல்லூரி-மருதானை ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியை),காலஞ்சென்ற கமலேஸ்வரி ஜெயராஜசிங்கம் ,காலஞ்சென்ற பரமேஸ்வரி சண்முகரட்ணம்(சிவக்கொழுந்து ரீச்சர்-கொக்குவில் இந்துக்கல்லூரி),காலஞ்சென்ற இராஜேஸ்வரி இந்திரன்,காலஞ்சென்ற சிவக்கொழுந்து செல்வரட்ணம்(Germany), காலஞ்சென்ற சிவக்கொழுந்து ஆனந்தகிருஸ்ணன், திரு.சிவக்கொழுந்து தர்மராசா(சட்ட்டத்தரணி-France),Dr.திருமதி தவமலர் சீவரத்தினம் (ஓய்வு பெற்ற சித்த வைத்திய அதிகாரி-மாநகரசபை),காலஞ்சென்ற சிவக்கொழுந்து சச்சிதானந்தன்(Germany) ஆகியோரின் அன்புசசகோதரரும் ஆவார்!
திருமதி பரமேஸ்வரி சிவஞானசேகரம்(கனடா), திரு.த.இராமநாதன்(ஓய்வுபெற்ற அரச அதிகாரி), திரு.த.கமலநாதன்(கனடா ) ஆகியோரின் மனைவி வழி மைத்துனரும்
திரு.S.சீவரட்ணம், சொர்ணகாந்தி,பங்கஜச்செல்வி (ஆசிரியை-பிரான்ஸ்),சரோஜா(இந்தியா) ஆகியோரின் மைத்துனரும்
திரு சிவஞானசேகரம்,திருமதி ஜெகதீஸ்வரி,திருமதி உசாந்தினி ஆகியோரின் சகலரும்
திரு.கமலநாதன் அனுசனின் மாமாவும்
காலஞ்சென்ற சிவஞானசேகரம் திலீப், சசகீலா ஆகியோரின் சித்தப்பாவும்
திரு T.சிவபாலன்(கனடா),திரு T.கருணாபாலன்(கனடா),கலையரசி செல்வகுமார்(ஆசிரியை-இணுவில் மத்திய கல்லூரி),வித்தியகலா(பொறியியலாளர் லண்டன்),சுரேஸ்குமார்(Dental surgen London),கேமேந்திரகுமார்(பொறியியலாளர் லண்டன்) ஆகியோரின் மாமனும்
சுனிதா செல்வரட்ணம்(ஆசிரியை கிளிநொச்சி)
மயூரன்,சசி,சுவி,ரோசினி,குமுதா,லதா,கௌசல்யா(France)ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்!
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பொலிசாரின் விசாரணை முடிவடைந்து சடலம் கையளிக்கப்பட்டதும் அறியத்தரப்படும்!
இறுதிச்சடங்கு தாவடி மயானத்தில் இடம்பெறும்!
தகவல்
கமலநாதன்(மைத்துனர்) ;0014169045786
இராமநாதன்(மைத்துனர்):0094776315908
கொள்ளையனின் கத்திக்குத்துக்கு இலக்கானவர் உயிரிழப்பு!!
கொள்ளையனை பிடிக்க முற்றபட்ட போது, அவனின் கத்திக் குத்துக்கு இலக்கான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், அங்கிருந்த தம்பதியரைத் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில், கத்திக்குத்துக்கு இலக்கான தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் கணவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மனைவி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
No comments:
Post a Comment