Wednesday, May 23, 2018

என்னை சிக்கவைக்க யாரோ செய்த சதி, தூத்துக்குடி பொலிசின் பரபரப்பு வாக்குமூலம்: வெளியான ஆடியோ


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13பேர் வரை உயிரிழந்த சம்பவத்தில் பொலிசார் சுட்டதாக சமூக ஊடகங்களில் வலம் வரும் வீடியோவில் காணப்படும் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படும் பொலிசார் ஒருவர், தான் யாரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவில்லை என்றும் வேண்டுமென்றே, தான் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் 11 மணியளவில், ஆயுதம் எதுவும் இல்லை, துப்பாக்கி எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று தனக்கு அழைப்பு வந்ததாகவும், தான் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சென்றதாகவும், தான் யாரையும் சுட்டுக்கொல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.
தான் சம்பவ இடத்திற்கு சென்றபோது சம்பவம் முடிந்து விட்டிருந்ததாகவும், யாரோ கல் வீசும்போது எச்சரிக்கும் விதமாக மட்டுமே சுட்டதாகவும், தான் சாதாரண ஒரு ஏட்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரிடம் அப்படியானால் நீங்கள் சுடவில்லையா என்று கேட்டபோது, மனசாட்சி படியும் கடவுள் சத்தியமாகவும் தான் யாரையும் சுட்டுக் கொல்லவில்லை என்றும், அதற்கு ஆதாரமாக தான் வேனை விட்டு இறங்கி வரும்போது யாரோ என்ன நடந்தது என்று கேட்க, அந்தக் காவலர் ஒன்றுமில்லை, வார்னிங்கிற்காகத்தான் சுட்டேன் என்று கூறுவதும் பதிவாகியுள்ளதை கவனிக்குமாறு கூறுகிறார்.
அதேபோல் வெளியாகியுள்ள புகைப்படங்களில் இருப்பதாக கூறப்படும் கலெக்டர் தற்போதைய கலெக்டரே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு நெருக்கமானவர்களும் கூட துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளதாகவும் கூறியுள்ள அவர் தான் மனித உயிர்களை மதிப்பவன் என்றும், தன்னிடம் விளக்கம் கேட்பவர்களுக்கு பதில் சொல்வதற்காக போனை கூட ஆஃப் செய்யாமல் இருப்பதாகவும் தயவு செய்து இந்த ஆடியோவை வெளியிட்டு தனக்கு உதவுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

http://news.lankasri.com/india/03/179472?ref=home-top-popular

No comments:

Post a Comment