Tuesday, May 1, 2018

பிறக்கும் குழந்தைகள் பெண்ணாக பிறந்து ஆணாக மாறும் அதிசய கிராமம் !


இன்று நாகரீகமான 21ம் நூற்றாண்டில் நாம் அனைத்து விதமான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகிறோம்,
பொதுவாக நம்மைப் போலவே எல்லாருக்கும் எல்லா விதமான வசதிகளும் கிடைத்திருக்கும் என்றுதான் அனேகம் பேர் நினைக்கின்றோம்.
ஆனால் அப்படிநினைப்பது தவறு என நம்மை பெரிதும் வியப்புக்கு உள்ளாக்ககூடியவைகளும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றது.
அப்படி நம்மை எல்லாம் மூக்கின்மேலே விரலை வைத்து வியக்கும் அளவிற்கு உள்ள ஒரு கிராமத்தைப் பற்றிய தகவல்தான் இது.
டெமினிசன் ரிபப்ளிக்கில் இருக்கக்கூடிய பரஹோனா மாகாணத்தில் அமைந்திருக்கிறது லாஸ் சலினாஸ் என்ற சிறிய நகரம். இதனை வளர்ந்து வருகிற கிராமம் என்றே சொல்லலாம்.
இந்த கிராமத்தில் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பிறக்கும் போது பெண் குழந்தைகளாகத்தான் இருக்கிறார்கள். ஆணாக யாரும் பிறப்பது இல்லையாம். ஆனால் பன்னிரெண்டு வயதிற்கு பிறகு இந்த பெண் குழந்தைகள் எல்லாம் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்களாம்.
இதற்காக இவர்கள் சிகிச்சையோ, அல்லது மருந்து மாத்திரைகளோ எடுத்துக் கொள்வதே கிடையாது. இயற்கையாகவே பருவமடைந்ததும் இந்த பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளாக மாறுகிறார்களாம்.
இப்படி பன்னிரெண்டு வயதில் ஆணாக மாறுகிறவர்களை guevedoches என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த கிராமத்தை சேர்ந்த ஜானி பிறக்கும் போது பெண்ணாக இருந்திருக்கிறார். பருவ வயதை அடைந்ததும் அவரது பிறப்பு உள்ளிளுத்துக் கொண்டதாகவும் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு ஆண் பிறப்புறுப்பு தோன்றியதாகவும் கூறியிருக்கிறார்.

அவர் பெண்ணாக இருக்கும் போது அவரின் பெயர் ஃபெலிசிடா. சிறு வயதில் கவுன் அணிந்து பாடசாலைக்கு செல்வது அவருக்கு பிடிக்காத ஒன்றாகவே இருந்தது.
எனினும் அப்போதிருந்தே அடிக்கடி ஆண்களுடன் சேர்ந்து தான் கால்பந்தாட்டம் விளையாடுவாராம்.
பருவவயதை அடைந்த பிறகு மனதளவில் மட்டுமே இருந்த மாற்றம் உடலளவில் வெளிப்படத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக அவரது செயல்களிலும் மாற்றங்கள் தெரிய பள்ளியில் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான அவரை எல்லாரும் பேய் என்று அழைத்தார்களாம்.
ஜானியைப் போலவே அந்த கிராமத்தில் வாழ்கின்ற கார்ல் என்பவரும் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். கார்ல் பெண்ணாக பிறந்து பெண்ணாக வளர்ந்திருக்கிறார் பருவ வயதை அடைந்த பிறகு தன் அடையாளம் மாறத் துவங்கியதும் கார்லோஸ் என்று பெயர் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
கார்லோஸ் குறித்து அவரது அம்மா கூறுகையில் குழந்தை பருவத்திலிருந்தே எப்போதும் ஆண் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளின் மீது தான் ஆர்வமிருக்கும் அதே போல சிறுவயதிலேயே அவளது தசைப்பகுதி எல்லாம் ஸ்டிஃபாக இருக்கும் என கூறியுள்ளார்.
ஆரம்பித்தில் இது கடவுளின் சாபம் என்றும் நாம் செய்து வந்த பாவங்களின் தண்டனை என்றும் சொல்லி நம்பியிருக்கிறார்கள் அங்கு வாழும் மக்கள்.
இந்நிலையில் கார்னெல் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஜூலியானா இம்பெர்டோ ஜின்லி என்ற மருத்துவர் இந்த அதிசயத்தை கேள்விப்பட்டு, அதன் காரணத்தை கண்டறிய அங்கே சென்று நீண்ட நாட்கள் தங்கியிருந்து நீண்ட ஆய்வினை மேற்கொள்கிறார்.
ஒவ்வொருவரின் அனுபவங்களையும் அவர்களின் வாழ்க்கைச் சூழல் பற்றியும் அவர் தெரிந்து கொள்கிறார்.
அதில் அங்கிருப்பவர்களுக்கு என்சைம் 5 அல்ஃபா ரெடுக்டேஸ் என்ற சத்து இல்லை என்பது அவருக்கு தெரியவருகிறது. இவை தான் டெஸ்ட்டோஸ்டிரோனை டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனாக மாற்றுகிறது. இந்த குறைபாடு அங்கிருக்கும் மக்களுக்கு மரபணு ரீதியாகவே தொடர்ந்து வருவதை அவர் கண்டுபிடித்தார்.
அதனால் தான் XY க்ரோமோசோமுடன் பிறக்கும் குழந்தைக்கு போதுமான அளவு ஹார்மோன் கிடைக்காததால் பிறக்கும் போது அதன் வளர்ச்சி இல்லாமல் இருக்கிறது.
பார்ப்பவர்கள் ஆணுறுப்பு இல்லை என்றதும் பெண் குழந்தை என்று சொல்லிவிடுகிறார்கள். பருவ வயதினை அடையும் போது அவர்களது உடலில் கூடுதலாக டெஸ்டோஸ்டிரோன் சுரக்கும்.
இதன் போது ஆண் குழந்தைகளின் பருவமடைந்ததற்கான அடையாளங்களாக மீசை வளர்வது, குரல் உடைவது ஆகியவை அந்த நேரத்தில் ஆணுறுப்பு வளர்ச்சிக்கான ஹார்மோன் கிடைக்கப்பெற்று ஆணுறுப்பு வளர்ச்சி அடைகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.


http://www.viduppu.com/world/04/168382?ref=ls_d_gossip

No comments:

Post a Comment