Tuesday, May 22, 2018

வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இருளில் மூழ்கும் வடக்கு மாகாணம்..


வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வடக்குக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளின் அதியுயர் மின்னழுத்த மின்மாற்ற வேலைகளுக்காகவே மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.
குறித்த இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.jvpnews.com/srilanka/04/173530?ref=home-jvpnews

No comments:

Post a Comment