Monday, May 7, 2018

பிரித்தானியாவில் அக்கம் பக்கத்தினரை முகம் சுழிக்க வைத்த தம்பதி: முதியவர் எழுதிய நறுக் கடிதம்


பிரித்தானியாவில் இளம் தம்பதியினர் மிகவும் நெருக்கமாக இருந்ததால், ஆத்திரத்தில் முதியவர் ஒருவர் கடிதம் எழுதி அவர்களின் வீட்டிற்கு அடியில் போட்டுள்ளார்.
பிரித்தானியாவின் Newcastle-ன் Lemington பகுதியைச் சேர்ந்த தம்பதி Karin Stone(33)-Jay(34). இவர்கள் வீட்டில் மிகவும் நெருக்கமாக இருக்கும் போது, வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்து கொள்வதில்லை என்று தெரிகிறது.

இதனால் இதை கண்ட அக்கம்பக்கத்தினர் பலர் அவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அவர்களின் வீட்டின் கதவுக்கு அடியில் ஒரு கடிதம் இருந்துள்ளது.
அந்த கடிதத்தில் நீங்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதில் தவறில்லை, ஆனால் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக் கொண்டால் நல்லது என்று எழுதப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தைக் கண்ட அந்த ஜோடி உடனடியாக தங்கள் வீட்டின் கதவை யாரும் பார்க்க வேண்டாம் என்று எழுதி ஓட்டியுள்ளனர்.
இது குறித்து Karin Stone கூறுகையில், எங்கள் வீட்டில் ஒரு கடிதம் இருந்தது. அதை நாங்கள் படித்து பார்த்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.

இதை ஒரு முதியவர் தான் எழுதியிருக்க வேண்டும், அந்த எழுத்துக்கள் அனைத்தும் முதியவரின் கையெழுத்து போன்று தான் உள்ளது.
இது குறித்து கூற வருபவர்கள் நேரடியாக எங்களிடம் வந்து கூறியிருந்தால், ஒன்றுமில்லை. அதற்காக இப்படி கடிதம் மூலம் எழுதி, அதில சில கூற முடியாத வார்த்தைகள் எல்லாம் எழுதப்பட்டிருந்தன.
நாங்கள் ஒன்றும் ஜன்னலின் அருகில் வந்து இது போன்று நடந்து கொள்ளவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைக்காகவே அப்படி ஒரு கடிதத்தை நாங்கள் எழுதி வைத்தோம். இது இப்படியே முடிந்துவிட்டால் நல்லது அல்லது மீண்டும் இது போன்று கடிதம் வருமா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

http://news.lankasri.com/uk/03/178242?ref=home-section

No comments:

Post a Comment