Sunday, April 15, 2018

துல்லியமான ஆப்ரிக்க ஜோதிடம்: உங்களின் எதிர்காலம் எப்படி?


ஆப்பிரிக்க ஜோதிட முறையில் எழும்புகளை தூக்கி எரியும் போது கிடைக்கும் அம்புகள், கோடுகள் போன்ற வடிவங்களை வைத்து ஜோதிடம் கணித்து கூறுவதை ஜியோமன்ஸி என்று கூறுவார்கள்.
இதில் 12 ராசிகள் உள்ளதை போல, பிறந்த தேதி மற்றும் மாதத்தை கொண்டு மிக துல்லியமான பலன்களை கூறும் 12 வகைகளை ஆப்பிரிக்க ஜோதிடத்திலும் உருவாக்கியுள்ளனர்.
ஜனவரி 4 - பிப்ரவரி 3 வரை
இவர்கள் நேர்மை, தாராளம், நல்ல சிந்தனை ஆகிய குணங்களை கொண்டு இருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் அவர்கள் தங்களை பற்றி தாங்களே கவலைப்பட்டு கொள்வார்கள்.
இவர்கள் அதிகாரத்தையும், தன்னம்பிக்கையையும் முன் நிறுத்துவார்கள். ஆனால் மற்றவர்களின் எதிர்மறை சிந்தனையானது இவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது.
பிப்ரவரி 4 - மார்ச் 5 வரை
இவர்கள் அறிவுதிறன் மிக்க புத்திசாலிகளாக இருப்பார்கள். சில நேரங்களில் இவர்களது கோபமானது பலரை தாக்குவதாக அமையும்.
ஆனால் இருப்பினும் இவர்களால் எத்தகைய தடைகளையும் தாண்டி வர முடியும். இவர்கள் வலிமை மிக்கவராக திகழ்வார்கள்.
மார்ச் 6 முதல் ஏப்ரல் 4 வரை
இவர்கள் மிதமான மன நிலையுடனும், பிறருடன் நெருக்கமாக பழகும் பண்பையும் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களது நெருக்கமான நபர்களுடன் மட்டுமே மனம் திறந்து பேசுவார்கள்.
தங்களது சொந்த வாழ்க்கையிலும், வேலையிலும் சிறப்பாக பணி ஆற்றுவார்கள். ஆனால் இவர்களால் அனைத்து விடயத்திலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று சொல்ல முடியாது.
5 ஏப்ரல் – 4 மே வரை
இவர்கள் சமூகத்தில் அனைவருடனும் எளிதாக பழக கூடியவர்களாக இருப்பதால், இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்கள் பிரச்சனைகளை நேருக்கு நேராக நின்று போராட மாட்டார்கள். பிரச்சனைகளை கண்டு ஓடி விடுவார்கள்.
அதனால் இவர்களை அதிகப்படியான சிக்கலில் கொண்டு சென்று விடும். எனவே உண்மையானவர்கள் போல இருக்கிறார்களோ அவர்களை நம்பக் கூடாது.
5 மே - 4 ஜூன் வரை
இவர்கள் சாமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை எதிர் பார்ப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களது வாழ்க்கையில் கடினத் தன்மை மற்றும் மிருகத்தனம் சேர்ந்து இருக்கும்.
ஆனால் இவர்கள் உள் புறத்தில் மென்மையானவர்களாகவும், வெளிப்புறத்தில் கடினமானவர்களாகவும் இருப்பார்கள்.
5 ஜூன் – 4 ஜூலை வரை
இவர்கள் சுயமாக முடிவெடுக்கும் திறமை கொண்டவர்கள். ஆனால் சில சமயங்களில் கடுமையாகவும், முரட்டுத்தனமாகவும் நடந்து கொள்வார்கள்.
இவர்களுடைய நேர்மறையான எண்ணங்கள் சரியான ஒரு பாதையை நோக்கி செல்லாது. அதனால் மற்றவர்களிடம் பொருமையாக நடந்து கொள்வது நல்லது.
5 ஜூலை – 4 ஆகஸ்ட் வரை
இவர்கள் நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களது வாழ்க்கைக்கான முடிவுகளை தைரியமாக எடுக்க கூடியவர்கள்.
மேலும் வாழ்க்கையில் வரும் பிரச்சனையை எதிர்த்து போராடும் தைரியம் இவர்களுக்கு இருக்கும். ஆனால் இவர்கள் எதிர்காலத்தில் இது தவறாக அமையும்,
5 ஆகஸ்ட் – 3 செப்டம்பர் வரை
இவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் ஒரு நிலையற்ற தன்மையை கொண்டிருப்பார்கள். இவர்கள் ஒரு முடிவை எடுத்து விட்டு, இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டோமே என்று வருத்தப்படுவார்கள்.
வேலை விடயத்தில் இவர்கள் நம்பகத்தன்மை உடையவர்களாக இருக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் மிகச்சிறந்த் நண்பர்களை பெற்றிருப்பார்கள்.
4 செப்டம்பர் – 3 அக்டோபர் வரை
இவர்களை பற்றி புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று. இவர்கள் தங்களது சொந்த உள்ளுணர்வு மூலமாகவே எதையும் செய்வார்கள்.
பிறரை சார்ந்திருக்க மாட்டார்கள். இவர்கள் கொஞ்சம் தனிமையானவர்கள், அதனால் இவர்களால் புதிய சூழ்நிலைகளை சமாளிப்பது சற்று கடினமாகும்.
4 அக்டோபர் – 3 நவம்பர் வரை
இவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்களாக, அதாவது அனைவரும் பயணிக்க சாலை வழியை தேர்ந்தெடுத்தால், இவர்கள் மற்றவர்களின் யோசனையில் இருந்து மாறுபட்டு நடந்து கொள்வார்கள்.
ஆனால் இவர்கள் தங்களின் வாழ்க்கை துணையை தாங்களே தேர்ந்தெடுப்பவராக இருப்பார்கள்.
4 நவம்பர் – 3 டிசம்பர் வரை
இவர்கள் சில நேரங்களில் சோர்வாக இருப்பதோடு, வாழ்க்கையில் தேவையில்லாத விடயங்களின் மீது தங்களது கவனத்தை செலுத்துவார்கள்.
ஆனால் சிலர் ஏழ்மையில் மாட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள், படிப்படியாக இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்து கொண்டே போவார்கள்.
4 டிசம்பர் – 3 ஜனவரி வரை
இவர்கள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்த எந்த நேரத்திலும் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அதனால் தங்களது லட்சியத்தை அடைய கடினமாக உழைப்பார்கள்.
ஆனால் இவர்கள் சற்று மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாவும் இருக்க கற்றுக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

http://www.viduppu.com/lifestyle/03/176424?ref=ls_d_special

No comments:

Post a Comment