Friday, April 6, 2018

சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்த இலங்கை அகதிகள் அதிரடியாக கைது!


இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்த இலங்கை அகதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இலங்கை அகதிகள் இராமேஸ்வரம் அருகே திருட்டு படகு ஒன்றில் இலங்கைக்குள் நுழைந்தபோது அவர்களை யாழ். காரைநகர் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதில் 2005ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதியாக தமிழகம் சென்று மண்டபம், விருதுநகர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த நிரோஷன்(வயது - 21), ஜெயகரன்(வயது - 35), பவுல்ராஜ்(வயது - 23), சூசை(வயது - 29), திலீபன்(வயது - 32), விஜிதரன்(வயது - 35), என்போரே கைது செய்யப்பட்டுள்ள அகதிகள் தெரியவந்துள்ளது.
இவர்கள் கடந்த 3ஆம் திகதி யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்றி தவித்ததால் மீண்டும் இலங்கைக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில், மண்டபத்தில் இருந்து படகு ஒன்றை திருடி அதில் இலங்கைக்கு வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்திய மத்திய, மாநில உளவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.tamilwin.com/community/01/179134?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment