பிரபாகரன் இறந்து விட்டதாக நினைத்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னை தமிழர்களின் தலைவராக முன்னிறுத்திச் செயற்பட்டு வருவதாக ம.தி.மு.க.வின் தலைவர் வை.கோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘அண்மைக்காலங்களில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்து வரும் கருத்துக்கள் உலகத் தமிழர்களை வேதனையடையச் செய்துள்ளன.தன்னையொரு தமிழர்களின் தலைவராக அதாவது தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக நினைத்துப் பார்த்து மேடைகளில் உரையாற்றியும், குறிப்பாக உலகத் தமிழர்களிடமும் தொடர்புகளைப் பேணி வருகின்றார்.
அத்துடன், புலம்பெயர் தமிழர்களிடம் வீர வசனங்களையும் ஆவேசப் பேச்சுக்களையும் பேசி அவர்களிடமிருந்து நிதி உள்ளிட்ட பலவற்றைப் பெற்று உலகத் தமிழர்களை ஏமாற்றி வருகின்றார். இவை அனைத்தும் தன்னை ஒரு தமிழர்களின் தலைவராக அதாவது உலகத் தலைவர்களின் தலைவராக நிலைநிறுத்திக் கொள்வதற்கான செயற்பாடுகளாகும்.
அதாவது தலைவர் பிரபாகரனுடன் இணைந்து எடுத்ததாக கூறி ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு தமிழ் மக்களிடம் குறிப்பாக புலம் பெயர் தமிழர்களிடம் ஆதரவினைத் தேட முயல்கின்றார். ஆனால் அவ்வாறான ஒரு புகைப்படம் எடுக்கப்படவில்லை. இவை அனைத்தும் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற எண்ணப்பாட்டில் தான்தோன்றித்தனமானச் செயற்படும் நிலைப்பாடாகும். ஆனால் உண்மை என்ன என்று எமக்குத் தெரியும்.
எனினும், இந்திய அரசியல்வாதிகள் தமிழர்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல்செய்வது ஒன்றும் புதிதல்ல என்பதும், தேர்தல் காலங்களில் மட்டும் அவற்றினைப் பெரிதுபடுத்துவதும் வழமையான விடயம் என இந்த வாரம் தமிழகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.canadamirror.com/india/04/170013?ref=ls_d_canadamirror
No comments:
Post a Comment